அச்யுதாஷ்டகம்...-2

 (அச்யுதாஷ்டகம்...)


(ஸ்லோகம் −2)


அச்யுதம் கேஸவம் ஸத்யபாமாதவம்

மாதவம் ஶ்ரீதரம் ராதிகாராதிதம்

இந்திராமந்திரம் சேதஸா ஸுந்தரம்

தேவகிநந்தனம் நந்தஜம் ஸந்ததே. 


ஒருநிலையில் நின்றுநம்மை

உயர்த்துகின்ற உத்தமன்; (அச்யுதன்)

சுருள் கேசக்குழலாலே

சொக்கவைக்கும் சுந்தரன்! (கேஸவன்)


தருவானே இன்பமெல்லாம்

சத்யபாமை காதலன்;  (ஸத்யபாமாதவன்)

அருள்கொடுக்கும் அலர்மகளின் 

அகம்நிறைந்த ஆண்டவன்! (மாதவன்)


திருமகளை த்ருப்தியோடு

மார்வமேற்ற தூயவன்; (ஶ்ரீதரன்)

ஒருஉயிராய் ராதையோடு

உட்கலந்த கிருட்டினன்! (ராதிகாராதிதன்)


பொருளாகப் பூமகளின்

நெஞ்சஏடு நுழைந்தவன்; (இந்திராமந்திரன்)

உருவத்தால் உளம்பறித்து

உயிர்கொள்ளும் மன்மதன்! 

(சேதஸா ஸுந்தரன்)       

                                                       

திருவயிற்றில் குடியிருக்க        

தேவகிக்கு இசைந்தவன்; (தேவகிநந்தன்)

இருள்கெடுக்கும் நந்தமகவை

இதயம் விம்மத் துதிக்கிறேன்!

Comments

Popular posts from this blog

12TH STANDARD CHEMISTRY PROJECT- DYEING

12TH STANDARD CHEMISTRY PROJECT (CBSE) - DENATURATION OF MILK AND EGG PROTEIN

ஸ்ரீசனீஸ்வர பகவான் நோய்களை யாருக்கு எப்போது தருவார் ?