அச்யுதாஷ்டகம்...-1
(மீள் பதிவு..)
(அச்யுதாஷ்டகம்...)
(ஸ்லோகம் −1)
அச்யுதம் கேஸவம் ராமநாராயணம்
க்ருஷ்ண தாமோதரம் வாஸுதேவம் ஹரிம்
ஶ்ரீதரம் மாதவம் கோபிகாவல்லபம்
ஜானகிநாயகம் ராமசந்த்ரம் பஜே (1)
அபயம்வேண்டும் யாவரையும்
அருளினாலே தாங்குவன்; (அச்யுதன்)
அரனுக்கும் அயனுக்கும்
அந்தர்யாமி ஆனவன்! (கேஸவன்)
அகமெல்லாம் குளிரவைக்கும்
அழகுதோற்றம் உடையவன்; (ராமன்)
அடியவர்கள் விரும்புகின்ற
உருவமதில் நிறைபவன்!(நாராயணன்)
அடர்இருளின் நிறத்தினனாய்
அகமதையே கவர்பவன்! (க்ருஷ்ணன்)
அன்னையிட்ட, கயிற்றுக்கு
அகப்பட்டு நின்றவன்! (தாமோதரன்)
அனைத்தினிலும் உறைபவனாம்
வசுதேவர் புத்திரன்! (வாஸுதேவன்)
ஆவியையும் அபகரித்து
ஆட்கொள்ளும் மித்திரன்! (ஹரி)
அலர்மகளை அன்போடு
மார்வமதில் ஏந்துவன்; (ஶ்ரீதரன்)
அவளுக்கு ஏற்றவனாய்
ஆசைக் கேள்வன் ஆனவன்! (மாதவன்)
ஆடிப்பாடும் கோபியர்க்கு
அந்தரங்க மோகனன்! (கோபிகா வல்லபன்)
அன்னைசீதை நாயகனாம்
அண்ணலைநான் துதிக்கிறேன்! (1)
Comments
Post a Comment