அச்யுதாஷ்டகம்..-3

 அச்யுதாஷ்டகம்..)


(ஸ்லோகம் −3..)


விஷ்ணவே ஜிஷ்ணவே ஸங்கினே சக்ரிணே

ருக்மிணிராகிணே ஜானகீஜானயே

(b)பல்லவீவல்லபாயார்ச்சிதாயாத்மனே

கம்ஸவித்வம்ஸினே வம்ஸினே தே நம:


அணுவினிலும் ஊடுருவி

அண்டமெலாம் நிறைந்தவன்; (விஷ்ணு)

அன்றும் இன்றும் என்றுமே

வெற்றியுடை மன்னவன்; (ஜிஷ்ணு)


அழகுஸங்கம் கையிலேந்தி

அகம்நுழையும் வித்தகன்; (ஸங்கின:)

ஆழிக்கரத்தால் அபயமளிக்கும்

அடியவரின் அஞ்சனன்; (சக்ரிண:)


ஆசைநெஞ்சம் ருக்மிணிக்கு

அடைக்கலமாய்த் தந்தவன்; (ருக்மிணி ராகின:)

அழகுபொலியும் ஜானகியியைத்

தன்மனையாய்க் கொண்டவன்; (ஜானகி ஜானய:)


ஆயர்குல கோபியரின்                  

நெஞ்சில்நிற்கும் நித்திலன்; (பல்லவி.....ஆத்மனே..)

அசுரன்கம்ஸன் கதைமுடித்த           ..

அஸஹாய சாஹஸன்; (கம்ஸவித்வம்ஸின:)


அதரம்தந்து வேங்குழலை

ஆவியுருக இசைப்பவன்; (வம்ஸின:)

அவனிருதாள் அபயமென்று

அடியேனும் பணிகிறேன்!

Comments

Popular posts from this blog

12TH STANDARD CHEMISTRY PROJECT- DYEING

12TH STANDARD CHEMISTRY PROJECT (CBSE) - DENATURATION OF MILK AND EGG PROTEIN

ஸ்ரீசனீஸ்வர பகவான் நோய்களை யாருக்கு எப்போது தருவார் ?