அச்யுதாஷ்டகம்..-3
அச்யுதாஷ்டகம்..) (ஸ்லோகம் −3..) விஷ்ணவே ஜிஷ்ணவே ஸங்கினே சக்ரிணே ருக்மிணிராகிணே ஜானகீஜானயே (b)பல்லவீவல்லபாயார்ச்சிதாயாத்மனே கம்ஸவித்வம்ஸினே வம்ஸினே தே நம: அணுவினிலும் ஊடுருவி அண்டமெலாம் நிறைந்தவன்; (விஷ்ணு) அன்றும் இன்றும் என்றுமே வெற்றியுடை மன்னவன்; (ஜிஷ்ணு) அழகுஸங்கம் கையிலேந்தி அகம்நுழையும் வித்தகன்; (ஸங்கின:) ஆழிக்கரத்தால் அபயமளிக்கும் அடியவரின் அஞ்சனன்; (சக்ரிண:) ஆசைநெஞ்சம் ருக்மிணிக்கு அடைக்கலமாய்த் தந்தவன்; (ருக்மிணி ராகின:) அழகுபொலியும் ஜானகியியைத் தன்மனையாய்க் கொண்டவன்; (ஜானகி ஜானய:) ஆயர்குல கோபியரின் நெஞ்சில்நிற்கும் நித்திலன்; (பல்லவி.....ஆத்மனே..) அசுரன்கம்ஸன் கதைமுடித்த .. அஸஹாய சாஹஸன்; (கம்ஸவித்வம்ஸின:) அதரம்தந்து வேங்குழலை ஆவியுருக இசைப்பவன்; (வம்ஸின:) அவனிருதாள் அபயமென்று அடியேனும் பணிகிறேன்!